கண்ணீர் விட்ட மெஸ்ஸி: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கால்பந்து உலகக்கோப்பையை ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. இறுதிப்போட்டியின் கூடுதல் நேரத்தில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த கோல் உதவியால், ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

நாக்-அவுட் சுற்றுகளில் எகிப்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக பின்தங்கிய நிலையில் இருந்து பின்னர் மீண்டெழுந்து வந்து அர்ஜென்டினா வென்றது. ஆனால், இறுதிப்போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினாவில் அதனைச் சாதிக்க முடியவில்லை. இதனால், இரண்டாவது முறையாக ஸ்பெயின் அணி ஆடவர் உலகக் கோப்பையை வென்றது.

ஒரே நேரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் நாடு என்ற பெருமையை அவர்கள் பெறுகிறார்கள்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹெலிகாப்டரில் நியூ ஜெர்சிக்கு வந்தார். அதே நேரத்தில், ஷகிரா, மடோனா மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோர் உலகக் கோப்பை இடைவேளை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அது 27 நிமிடங்கள் வரை நீடித்தது.

போட்டியின்போதும் போட்டி முடிந்த பிறகும் ஸ்பெயின் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இருந்தனர். இந்தப் போட்டியின் முக்கியமான தருணங்கள் புகைப்படத் தொகுப்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு