You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி - மனைவி கூறியது என்ன?
டெல்லி ஜந்தர் மந்தரில் 21-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் என்ன நடக்கிறது?
சோனம் வாங்சுக்: 9 வயது வரை பள்ளிக்கே செல்லாதவர் புதுமை சிந்தனையால் ஆராய்ச்சியாளரான கதை
புகழ்பெற்ற கல்வியாளரும், பொறியாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக், 9 வயது வரை பள்ளிக்குச் செல்லவில்லை. இப்போது தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் வாழ்வில் கடந்து வந்த பாதை எத்தகையது?
சோவியத் அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கி 36 ஆண்டுகளான பிறகும் விலகாத அச்சம்
1989-இல் நார்வே கடலடியில் மூழ்கிய சோவியத் யூனியனின் 'காம்சோம்லெட்ஸ்' அணு உலை நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு ஆயுதங்கள் சிதைவடைந்து வருவதால், அது பெரும் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா?அதிகம் கவனம் பெறாத ஆணின் பிரச்னைகள்
"எனது பதின்ம வயது முழுவதும், ஒரு தெளிவான செய்தி மட்டுமே வலியுறுத்தப்பட்டது. ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளக் கூடாது, இல்லையெனில் ஒரு பெண் கர்ப்பமாகிவிடக்கூடும் என்பதுதான் அச்செய்தி. எனவே, நீங்கள் வளரும்போது, அனைத்தும் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அவ்வாறு நடக்காதபோது, என்ன செய்வது அல்லது யாரிடம் செல்வது என்று உங்களுக்குத் தெரிவதில்லை"
கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
காணொளி, காணொளி: கென்யாவில் இயற்கையைப் பாதுகாக்க களமிறங்கிய பெண்கள், கால அளவு 1,40
பல தலைமுறைகளாக, கென்யாவில் கடல் சார்ந்த பணிகள் ஆண்களுக்கானதாகவே கருதப்பட்டன. ஆனால், அந்த எண்ணத்தை பெண்கள் இன்று மாற்றி வருகிறார்கள்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனியார் விண்வெளி நிறுவனங்கள் குறியா? நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜினாமா
நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பதவி விலகல்களை ஏற்கும் தனது விதிகளை இஸ்ரோ மாற்றியுள்ளது. என்ன நடக்கிறது? வெளியேறும் விஞ்ஞானிகள் எங்கே செல்கிறார்கள்?
தவெக எம்எல்ஏவின் ரூ.35 கோடி 'பேரம்' புகார்: டி.வி. நெறியாளர் விஜயன் விசாரிக்கப்பட்டதன் பின்னணி
தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
'ஜனநாயகன்' பார்க்க குழந்தைகளுடன் திரையரங்கு செல்ல முடியாது - ஏன்? விஜய் படம் கடந்து வந்த பாதை
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை குழந்தைகள் திரையரங்கில் பார்க்க முடியாது என்பது ஏன்? படம் கடந்து வந்த பாதை
பெலே, மரடோனாவை மெஸ்ஸி முந்தி விட்டாரா? மிகச்சிறந்த கால்பந்து வீரர் யார் என்பது பற்றிய ஒரு பார்வை
39 வயதிலும், லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவின் 2026 உலகக் கோப்பை தொடரின் மையப்புள்ளியாக விளங்குகிறார். ஆனால், அவர் தனது சக நாட்டு வீரரான டியாகோ மாரடோனா, பிரேசிலின் பீலே ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டாரா?
தாயை கொன்றவரை கண்டறிய நாடு விட்டு நாடு சென்று 3 மகன்கள் 17 ஆண்டு நடத்திய போராட்டம்
"நாங்கள் குறிப்பாக உணர்ச்சிவசப்படும் நபர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அது வார்த்தைகள் வெளிவராத அளவு ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். அது வரலாற்றிலேயே மிகவும் அமைதியான ஒரு விமானப் பயணமாக இருந்தது, ஏனென்றால் எங்களால் அப்போது வேறு என்ன பேசமுடியும்?"
'முதல்வர் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பதா?' - துணைவேந்தர் நியமன சிக்கல் எப்போது தீரும்?
பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன விவகாரம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் தவெக அரசின் அணுகுமுறை இதில் எப்படி இருக்கிறது? இந்தச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இந்தியா: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் - பிபிசி புலனாய்வு
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக 'பிபிசி ஐ' புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
'வாஷிங் மெஷின் டிரம்மில் அடைப்பு': பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்களின் குழந்தைகளுக்கு காப்பகத்தில் என்ன நடந்தது?
சிறு குழந்தைகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் பெண் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பழைய புழுங்கல் அரிசிக்கு அதிக மவுசு ஏன்? சமைக்கும் போது என்ன நடக்கிறது?
பொதுவாக புதிய உணவுப் பொருட்களுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கும். ஆனால் அரிசி விஷயத்தில் மட்டும் இதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை விட, ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட புழுங்கல் அரிசிக்கு அதிக விலை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர்.
திமுக - அதிமுகவை இணைக்கும் கருணாநிதி - எம்ஜிஆரின் முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
'மாமனாரை கொன்ற மருமகளை கைது செய்யாத காவல்துறை': தற்காப்பு பற்றி சட்டம் கூறுவது என்ன?
"புலன் விசாரணையில் தற்காப்புக்காக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆகவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34ஐ சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும்" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
பெண்ணின் வீட்டுக்கு அடியில் '40,000 உடல்கள்' - விசாரணையில் என்ன தெரியவந்தது?
1996ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று, புதுப்பித்தல் பணிகளின் போது, மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் எலும்புகளைக் கண்டெடுத்தார் - அவை சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்டதும், அத்துடன் தோராயமாக 40,000 சடலங்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுவதுமான, நீண்ட காலமாக காணாமல் போன 'புதிய கருப்பர்களின் மயானத்தின்' எச்சங்கள் ஆகும்.
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரான் போருக்கு முந்தைய நிலைக்கும் கீழே சரிந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இவ்வளவு கடுமையான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? அது எப்போது குறையும்?
இரானின் முடக்கப்பட்ட சொத்துகள் இந்தியா, சீனா உள்பட எந்தெந்த நாடுகளில் உள்ளன?
முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது என்பது, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட எந்தெந்த நாடுகளில் அந்த சொத்துகள் உள்ளன?
'அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சீனா': அமெரிக்கா, ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் எந்த இடத்தில் உள்ளது?
சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
'தோண்டத்தோண்ட எலும்புக் கூடுகள்': இலங்கையின் செம்மணி - சித்துபாத்தி புதைகுழி கவனம் பெறுவது ஏன்?
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது. குறிப்பாக மனித புதைகுழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
40 வயதை தாண்டிய ஆண்கள் அவசியம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
முறையான மருத்துவப் பரிசோதனைகள் நோய்களைக் கண்டறிவதுடன், வாழ்க்கை முறையை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிக்கின்றன. எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் சில முக்கியமான மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாமல் செய்துகொள்வது அவசியமாகும்
பூம்புகார் துறைமுகம் எங்கே இருந்தது? அதற்கு என்ன ஆனது? ஆய்வில் புதிய தகவல்
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பு மற்றும் வரலாறு அறிவியல்பூர்வமாக எவ்வளவு தூரம் உறுதி செய்யப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தெரிய வந்தது என்ன?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்