You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கென்யாவில் இயற்கையைப் பாதுகாக்க களமிறங்கிய பெண்கள்
காணொளி: கென்யாவில் இயற்கையைப் பாதுகாக்க களமிறங்கிய பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
பல தலைமுறைகளாக, கென்யாவில் கடல் சார்ந்த பணிகள் ஆண்களுக்கானதாகவே கருதப்பட்டன. ஆனால், அந்த எண்ணத்தை பெண்கள் இன்று மாற்றி வருகிறார்கள்.
மொனாஷா, சுவாஹிலி மொழியில் இவரை "மம்மா மடும்பாவே", அதாவது "பவளப்பாறைகளின் தாய்" என்று அழைக்கிறார்கள்.
காலை நேரங்களில், தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியைத் தொடங்குவதற்கு முன்பாகவே, கடலுக்குள் இறங்கி சேதமடைந்த பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுகிறார். பவளப் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பவளத் துண்டுகளைப் பயன்படுத்தி, சேதமடைந்த பவளப்பாறைகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு