காணொளி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து பள்ளி மாணவர்கள் காயம்

காணொளி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து பள்ளி மாணவர்கள் காயம்
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் காசர்கோடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 7 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காசர்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆட்டோவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நபர்களை ஏற்றிச் சென்றதும், அதிவேகமாக ஆட்டோவை இயக்கியதுமே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு