You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சிகிச்சைக்கு நாகப்பாம்புடன் மருத்துவமனை வந்த நபர்
காணொளி: சிகிச்சைக்கு நாகப்பாம்புடன் மருத்துவமனை வந்த நபர்
பிரசுரிக்கப்பட்டது
இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நாகப்பாம்புடன் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம், ராம்நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பாம்பு மீட்பராக உள்ள அருண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தகவலறிந்து மீட்கச் சென்றார். அந்தப் பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்க முயன்றபோது அந்தப் பாம்பு அவரைக் கடித்தது. உடனே அருண் அந்தப் பாம்பை டப்பாவோடு எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு