காணொளி: 'கால்பந்து இல்லாவிட்டால் குழந்தை தொழிலாளி ஆகியிருப்பேன்' - சென்னை சிறுமியின் கதை
காணொளி: 'கால்பந்து இல்லாவிட்டால் குழந்தை தொழிலாளி ஆகியிருப்பேன்' - சென்னை சிறுமியின் கதை
பிரசுரிக்கப்பட்டது
வியாசர்பாடியின் முல்லை நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் SC-STEDS எனும் அமைப்பு, சுற்றுப்பகுதிகளில் சமூக-பொருளாதார ரீதியாக விளிம்புநிலையில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கால்பந்து விளையாட்டை பயிற்றுவித்து, அதன் மூலம் அவர்களை கல்வியை நோக்கி நகர்த்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக, பெண் குழந்தைகள் மத்தியில் கல்வி இடைநிற்றல், குழந்தை தொழிலாளர்களாக மாறுதல், சிறுவயதிலேயே திருமணம் ஆகியவற்றை தடுத்து அவர்களை கல்வி பாதைக்கு அழைத்துச் செல்கிறது கால்பந்து.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



