காணொளி: நடுவானில் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்ட நபர் - என்ன நடந்தது?

காணொளி: நடுவானில் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்ட நபர் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

நடுவானில் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்ட நபர் - என்ன நடந்தது?

விமானப் பயணத்தின் போது, ரயன்ஏர் விமானத்தின் ஜன்னல் வழியாக கிட்டத்தட்ட வெளியே இழுக்கப்பட்ட நபரின் மனைவி, அந்தச் சம்பவத்தை விவரித்துள்ளார்.

"அவர் சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வெளியே இழுக்கப்பட்டபடி இருந்தார்," என்று அவர் கூறினார். "அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணும் நானும் சேர்ந்து அவரை மீண்டும் உள்ளே இழுக்க முயற்சித்தோம்" என்றும் தெரிவித்தார்.

விமானக் கண்காணிப்பு தரவுகளின்படி, விமானம் புறப்பட்டு சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு திடீரென 9,000 அடி (2,700 மீட்டர்) உயரம் கீழிறங்கியுள்ளது.

அப்போது பயணிகள் "ஏதோ ஒரு வெடிப்பு போன்ற சத்தம் கேட்டது" என்று உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அதிகாரி ஒருவர், செர்பியாவை சேர்ந்த 61 வயதான அந்த நபருக்கு உராய்வால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு