You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேஸ் சிலிண்டர்கள்
நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி இது
இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரசாயனி-மோஹ்பாடா பகுதியில் நடந்தது.
இங்குள்ள பாதாளகங்கா ஆற்றின் வெள்ளத்தில் எல்பிஜி சிலிண்டர்கள் அடித்து செல்லப்பட்டன.
பன்வெல் தாலுகாவில் உள்ள சாவ்னே கிராமத்தில் எச்.பி.சி.எல் நிறுவனத்திற்குச் சொந்தமான கேஸ் சிலிண்டர் ஆலை ஒன்று உள்ளது.
இந்த ஆலையின் வழியாக ஒரு ஓடை செல்கிறது. கனமழையின் காரணமாக திடீரென ஓடையில் நீர்மட்டம் உயர்ந்து, ஆலை வளாகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது.
இதனால், வெள்ளத்துடன் சேர்த்து 2,000-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
அந்தச் சிலிண்டர்களில் சில காலியானவை என்றும், சிலவற்றில் கேஸ் நிரப்பப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்ட நிர்வாக அதிகாரிகள், அவற்றில் 1,200 சிலிண்டர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்
ஆற்றில் மிதந்து சென்ற சிலிண்டர்களை, வெள்ளத்தின் ஆபத்து உணராமல், அங்குள்ள மக்கள் செல்லும் காட்சிகள் காண முடிகிறது.
இந்நிலையில் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்கள், எச்.பி.சி.எல் டீலரிடமோ அல்லது காலாப்பூர் அல்லது பென் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திலோ ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு