You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சிறுவனை தாக்கிய சிங்கத்தின் வாந்தியில் தெரியவந்தது என்ன?
எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்
ஜூலை 11ஆம் தேதி காலை குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கிர்னார் புனிதத் தலத்தின் படிக்கட்டுகளிலிருந்து ஒரு சிறுவனை சிங்கம் காட்டுக்குள் இழுத்துச் சென்றது. பின்னர், வனத்துறைக் குழுவினர் அந்த சிறுவனின் காலணிகள், ஆடைகள் மற்றும் மனித உடல் பாகங்களைக் கண்டெடுத்தனர்.
சிங்கத்தைப் பிடிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு சிங்கம் பிடிக்கப்பட்டது. அந்த சிங்கத்தின் வாந்தியை கால்நடை மருத்துவர் பரிசோதித்த நிலையில் அதில் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர மேலும் 2 சிங்கங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடுத்த உத்தரவு வரும் வரை கிர்னார் மலையின் புதிய படிக்கட்டுப் பாதை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு