You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இனி பின்வாங்க மாட்டோம்' எனக் கூறும் சிஜேபி: ஜந்தர் மந்தரில் குவியும் மக்கள் - கள நிலவரம் என்ன?
காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று காலை மழையிலும் போராட்டக்காரர்கள் தார்பாலின் கூரை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ 16 மெட்ரோ ரயில்நிலையங்களை மூடியுள்ளது.
இதற்கிடையே காக்ரோச் ஜனதா கட்சி போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி நடப்பது என்ன? களத்திலிருந்து பிபிசி தமிழ் வழங்கும் தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு